Saturday, August 7, 2010
நன்மைகளின் வாயில்கள்!
வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)
காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)
நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)
பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)
இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)
‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ
பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
..
ஜும்ஆ தினத்தின் மகத்தான பொக்கிஷங்கள்!
எழுதியவர்/உரை:மௌலவி அஸ்ஹர் ஸீலானி
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அவனது சாந்தியும், சமாதானமும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழி முறையை பின் பற்றி நடந்த ஸஹாபாக்கள், அன்னாரது குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:
1357 عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ
وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام ழூ (نسائيஇ أبوداودஇ أحمد).
நாட்களில் மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும், அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார், அதில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது, அதில் தான் சூர் ஊதப்படும், அதில் தான் எழுப்பப்படுவார்கள். எனவே ஜும்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத் எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகின்றது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி), அஹ்மத், அபூதாவுத், நஸாயி).
ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருட நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய கூலி:
292 عَنِ أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا (ترمذيஇ أبواداود).
எவர் ஜும்ஆவடைய நாளில் குளித்து, அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏராது நடந்து சென்று, இமாமை அன்மித்து உரையை செவிமெடுப்பரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்வார்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம்:
عن أبي سعيد قال: قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعةஇ أضاء له من النور ما بين الجمعتين (رواه النسائيஇ والحاكم وقال: صحيح).
எவர் கஹ்ப் அத்தியாயத்தை ஜும்ஆ தினத்தில் ஒதுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம் கிடைக்கும்’ (நஸாயி, ஹாகிம்).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியிலுள்ள உமது பாவங்களுக்கு மன்னிப்பு:
834 عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ
الْجُمُعَةِ الْأُخْرَى (البخاري).
ஒருவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, முடியுமான வரை சுத்தமடைந்து, எண்ணையை தேய்த்து, அல்லது தனது வீட்டில் இருந்து வாசனைத் திரவியங்களை தடவி, பிறகு (மஸ்ஜிதுக்கு) சென்று இரண்டு பேருக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தாமல், பின் தனக்கு கடமையானதை தொழுது, இமாம் உரையை நிகழ்த்தும் போது வாய் மூடியவராக அதை செவியேற்பாரானால், அந்த ஜும்ஆவுக்கும் வரும் ஜும்ஆவுக்கும் மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மானுல் பாஃரிஸி (ரழி), ஆதாரம்: புஹாரி).
ஜும்ஆவுடைய தினத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு:
1407 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَقَالَ بِيَدِهِ يُقَلِّلُهَا يُزَهِّدُهَا (متفق عليه).
‘நிச்சயமாக ஜும்ஆவுடைய தினத்தில் ஒரு நேரம் உண்டு, ஒருவர் நின்றவராக தொழுது அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை பிரார்த்தித்து அது அந்த நேரத்துடன் உடன்பட்டு விடுமானால் அல்லாஹ் அதை அவருக்கு வழங்கி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முத்தபஃகுன் அலைஹி).
அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:
ஜும்ஆவடைய நாளின் கடைசி நேரம்:
7363 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ (أحمد).
‘நிச்சயமாக ஜும்ஆ தனத்தில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (ஆதாரம்: அஹ்மத்).
மற்றொரு அறிவிப்பில்:
884 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ………….. فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ (أبوداودஇ نسائي).
ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி). இந்தக் கருத்தை இமாம் இப்னுல் கய்யும் என்ற அறிஞரும் ஆதரித்துள்ளார்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்:
1409 عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى
أَنْ تُقْضَى الصَّلَاةُ (مسلم).
இமாம் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரழி).
ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:
1) நன்றாக குளித்தல்.
2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.
3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.
4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.
5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.
6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அவனது சாந்தியும், சமாதானமும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழி முறையை பின் பற்றி நடந்த ஸஹாபாக்கள், அன்னாரது குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:
1357 عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ
وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام ழூ (نسائيஇ أبوداودஇ أحمد).
நாட்களில் மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும், அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார், அதில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது, அதில் தான் சூர் ஊதப்படும், அதில் தான் எழுப்பப்படுவார்கள். எனவே ஜும்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத் எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகின்றது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி), அஹ்மத், அபூதாவுத், நஸாயி).
ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருட நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய கூலி:
292 عَنِ أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا (ترمذيஇ أبواداود).
எவர் ஜும்ஆவடைய நாளில் குளித்து, அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏராது நடந்து சென்று, இமாமை அன்மித்து உரையை செவிமெடுப்பரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்வார்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம்:
عن أبي سعيد قال: قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعةஇ أضاء له من النور ما بين الجمعتين (رواه النسائيஇ والحاكم وقال: صحيح).
எவர் கஹ்ப் அத்தியாயத்தை ஜும்ஆ தினத்தில் ஒதுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம் கிடைக்கும்’ (நஸாயி, ஹாகிம்).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியிலுள்ள உமது பாவங்களுக்கு மன்னிப்பு:
834 عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ
الْجُمُعَةِ الْأُخْرَى (البخاري).
ஒருவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, முடியுமான வரை சுத்தமடைந்து, எண்ணையை தேய்த்து, அல்லது தனது வீட்டில் இருந்து வாசனைத் திரவியங்களை தடவி, பிறகு (மஸ்ஜிதுக்கு) சென்று இரண்டு பேருக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தாமல், பின் தனக்கு கடமையானதை தொழுது, இமாம் உரையை நிகழ்த்தும் போது வாய் மூடியவராக அதை செவியேற்பாரானால், அந்த ஜும்ஆவுக்கும் வரும் ஜும்ஆவுக்கும் மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மானுல் பாஃரிஸி (ரழி), ஆதாரம்: புஹாரி).
ஜும்ஆவுடைய தினத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு:
1407 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَقَالَ بِيَدِهِ يُقَلِّلُهَا يُزَهِّدُهَا (متفق عليه).
‘நிச்சயமாக ஜும்ஆவுடைய தினத்தில் ஒரு நேரம் உண்டு, ஒருவர் நின்றவராக தொழுது அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை பிரார்த்தித்து அது அந்த நேரத்துடன் உடன்பட்டு விடுமானால் அல்லாஹ் அதை அவருக்கு வழங்கி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முத்தபஃகுன் அலைஹி).
அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:
ஜும்ஆவடைய நாளின் கடைசி நேரம்:
7363 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ (أحمد).
‘நிச்சயமாக ஜும்ஆ தனத்தில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (ஆதாரம்: அஹ்மத்).
மற்றொரு அறிவிப்பில்:
884 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ………….. فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ (أبوداودஇ نسائي).
ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி). இந்தக் கருத்தை இமாம் இப்னுல் கய்யும் என்ற அறிஞரும் ஆதரித்துள்ளார்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்:
1409 عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى
أَنْ تُقْضَى الصَّلَاةُ (مسلم).
இமாம் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரழி).
ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:
1) நன்றாக குளித்தல்.
2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.
3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.
4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.
5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.
6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.
Friday, August 6, 2010
மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
எழுதியவர் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!
கணவரை மகிழ்விப்பது எப்படி?
நற்சிந்தனைகள் - வாழ்வியல்
(அல்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில்)
மனைவியின் அழகிய வரவேற்பு
பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் - குறிப்பாக - மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்
நறுமணமும் அலங்கரிப்பும்
உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).
உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).
தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).
கணவனுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்
முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு வெளிப்படுத்துவது ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?" அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்" ( நஸயீ).
இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள் (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ).
"கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது" (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).
உங்கள் கணவனுக்குத் தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள் (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).
உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்)
உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்
தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).
அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது
உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).
ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.
உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்
அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்" என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்
உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்
உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் "இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?" தன்னைத்தானே நொந்து கொள்வார்"
உறுதுணையும் உதவியும்
உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் 'தோள்' கொடுங்கள்
கட்டுப்படுதல்
"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).
"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).
கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் - அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது
ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)
முதலாவதாக, கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை/பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.
நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் உப்பு-சப்பு பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).
கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும்வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
குடும்பத்துக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் கணவர் கோபமுற்று இருந்தால், கோபம் குறையும்வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்).
அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.
"என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்" என்றோ "எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்" என்றோ "நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது!" என்றோ கேள்விக் கணைகளை எழுப்பி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)
"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்" (அல்குர்ஆன்: 24:31).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)" (அல்குர்ஆன்: 4:34).
தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்
குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்).
வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.
கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.
அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.
உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.
மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்).
கணவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள் - குறிப்பாக - கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்.
பொறுமையும் பாதுகாப்பளித்தலும்
கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.
வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்...).
அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).
இறைவனுக்கு அடிபணிவதிலும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்
உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.
இரவுத் தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.
அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.
இஸ்லாமிய பயான் கேஸட்டுகளைத் தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ரு(இறைநினைவு)களில் ஈடுபடுங்கள்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.
உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி, கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.
அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.
அழகிய வீட்டுப் பராமரிப்பு
வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).
தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.
குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்
கணவனுடைய பணத்தை, அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).
வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.
நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).
கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (திர்மிதி, இப்னுமாஜா).
- சகோ. முஃப்தி
(அல்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில்)
மனைவியின் அழகிய வரவேற்பு
பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் - குறிப்பாக - மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்
நறுமணமும் அலங்கரிப்பும்
உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).
உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).
தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).
கணவனுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்
முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு வெளிப்படுத்துவது ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?" அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்" ( நஸயீ).
இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள் (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ).
"கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது" (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).
உங்கள் கணவனுக்குத் தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள் (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).
உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்)
உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்
தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).
அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது
உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).
ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.
உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்
அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்" என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்
உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்
உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் "இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?" தன்னைத்தானே நொந்து கொள்வார்"
உறுதுணையும் உதவியும்
உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் 'தோள்' கொடுங்கள்
கட்டுப்படுதல்
"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).
"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).
கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் - அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது
ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)
முதலாவதாக, கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை/பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.
நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் உப்பு-சப்பு பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).
கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும்வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
குடும்பத்துக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் கணவர் கோபமுற்று இருந்தால், கோபம் குறையும்வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்).
அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.
"என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்" என்றோ "எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்" என்றோ "நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது!" என்றோ கேள்விக் கணைகளை எழுப்பி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)
"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்" (அல்குர்ஆன்: 24:31).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)" (அல்குர்ஆன்: 4:34).
தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்
குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்).
வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.
கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.
அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.
உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.
மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்).
கணவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள் - குறிப்பாக - கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்.
பொறுமையும் பாதுகாப்பளித்தலும்
கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.
வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்...).
அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).
இறைவனுக்கு அடிபணிவதிலும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்
உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.
இரவுத் தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.
அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.
இஸ்லாமிய பயான் கேஸட்டுகளைத் தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ரு(இறைநினைவு)களில் ஈடுபடுங்கள்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.
உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி, கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.
அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.
அழகிய வீட்டுப் பராமரிப்பு
வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).
தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.
குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்
கணவனுடைய பணத்தை, அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).
வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.
நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).
கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (திர்மிதி, இப்னுமாஜா).
- சகோ. முஃப்தி
Thursday, August 5, 2010
ஸலவாத் கூறுவோம்
إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)
"ஸலவாத்" என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. "ஸலவாத்" களில் மிகவும் உயர்ந்த "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த" என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.
"யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக" அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பது பொருள்.
ஸலவாத் ஏன் கூற வேண்டும்?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.
"ஸலவாத் பொருள்"
நம்மில் சிலர் ஸலவாத் என்றால், "நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்" என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரழி) நூல்: புகாரி
இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் "நபிகளுக்காக துஆ செய்வது" என்பதே பொருள். நமக்கென்ன தகுதி உண்டு? அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு "நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்" என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.
"துஆ" என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்ய வேண்டியது" என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை. உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.
"சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்" எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்." அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.
இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது "உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.
"அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்") என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக "வஅலைக்குமுஸ்ஸலாம்" என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.
அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், "நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?" என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம்.
"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.
"என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்" என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.
இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும். என்பதை ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.
"உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள் கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும்.
என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்" என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ
"என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்". என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும். அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ
"யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்" அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்
"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் "நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் "நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா
இந்த ஹதீஸிற்குச் சிலர்தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டதால் இங்கெ சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.
"நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது" என்ற சொற்றொடர்களிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கி விட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர்," நீங்கள் மக்கிவிடும் போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?" என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத் தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கி விடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள் தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி "நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது" என்று கூறாமல், "நபிமார்கள்" என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த ஊத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.
எனவே நபிமார்களின் உடல்களை மட்டும் தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலிருக்கலாம். அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுபாப்பான்.
ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.
அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் "அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்."
உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.
யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.
யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும்படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?
நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா? தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?
இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் "ஸலவாத்" என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.
ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.
ஒரு முஸ்லிம், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் "இப்படித் தான் செய்ய வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்ய வேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.
உதாரணமாக தொழுகையில் ‘ருகூவு’ செய்யும் போதும், ‘சுஜுத்’ செய்யும் போதும் "இதைத் தான் ஓத வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘ஸலவாத்’ ஓதுவது சிறந்தது தானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில் - சுஜுதில் ஒருவன் ‘ஸலவாத்’ ஓதினால், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் "இதைத்தான் இந்த நேரத்தில் ஓத வேண்டும்" என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் ‘பாங்கு’ சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று துவங்கி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிக்க வேண்டும். இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘பாங்கு’ என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது. அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்குவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதும், ருகூவில் ‘ஸலவாத்’ சொல்வதும் ஒன்று தான்.
பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ கூற வேண்டும் என்று இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழாகள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித் தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.
இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபணை செய்யும் போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒரு சில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓத வேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.
‘ஸலவாத்’ ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னால் ‘அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் ‘யாஸீன்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம்! "ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஒதுகிறேன்" என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபணை செய்தோமோ. அது ‘ஸலவாத்’ பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பாங்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிகின்றது, ஒருவன் இப்படி யோசிக்கிறான். ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது கலிமாவின் ஒரு பகுதி தான், இன்னொரு பகுதி "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது "முஹம்மதுர் ரஹுலுல்லாஹ்’ என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான, நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட ‘பித்அத்’ தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும் போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது . நாம், அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக - ஆமீன்.
நன்றி
kayalpatnamislam.blogspot.com
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)
"ஸலவாத்" என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. "ஸலவாத்" களில் மிகவும் உயர்ந்த "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த" என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.
"யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக" அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பது பொருள்.
ஸலவாத் ஏன் கூற வேண்டும்?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.
"ஸலவாத் பொருள்"
நம்மில் சிலர் ஸலவாத் என்றால், "நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்" என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரழி) நூல்: புகாரி
இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் "நபிகளுக்காக துஆ செய்வது" என்பதே பொருள். நமக்கென்ன தகுதி உண்டு? அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு "நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்" என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.
"துஆ" என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்ய வேண்டியது" என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை. உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.
"சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்" எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்." அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.
இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது "உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.
"அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்") என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக "வஅலைக்குமுஸ்ஸலாம்" என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.
அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், "நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?" என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம்.
"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.
"என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்" என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.
இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும். என்பதை ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.
"உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள் கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும்.
என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்" என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ
"என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்". என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும். அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ
"யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்" அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்
"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் "நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் "நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா
இந்த ஹதீஸிற்குச் சிலர்தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டதால் இங்கெ சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.
"நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது" என்ற சொற்றொடர்களிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கி விட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர்," நீங்கள் மக்கிவிடும் போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?" என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத் தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கி விடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள் தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி "நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது" என்று கூறாமல், "நபிமார்கள்" என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த ஊத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.
எனவே நபிமார்களின் உடல்களை மட்டும் தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலிருக்கலாம். அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுபாப்பான்.
ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.
அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் "அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்."
உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.
யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.
யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும்படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?
நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா? தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?
இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் "ஸலவாத்" என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.
ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.
ஒரு முஸ்லிம், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் "இப்படித் தான் செய்ய வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்ய வேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.
உதாரணமாக தொழுகையில் ‘ருகூவு’ செய்யும் போதும், ‘சுஜுத்’ செய்யும் போதும் "இதைத் தான் ஓத வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘ஸலவாத்’ ஓதுவது சிறந்தது தானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில் - சுஜுதில் ஒருவன் ‘ஸலவாத்’ ஓதினால், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் "இதைத்தான் இந்த நேரத்தில் ஓத வேண்டும்" என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் ‘பாங்கு’ சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று துவங்கி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிக்க வேண்டும். இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘பாங்கு’ என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது. அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்குவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதும், ருகூவில் ‘ஸலவாத்’ சொல்வதும் ஒன்று தான்.
பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ கூற வேண்டும் என்று இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழாகள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித் தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.
இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபணை செய்யும் போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒரு சில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓத வேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.
‘ஸலவாத்’ ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னால் ‘அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் ‘யாஸீன்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம்! "ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஒதுகிறேன்" என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபணை செய்தோமோ. அது ‘ஸலவாத்’ பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பாங்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிகின்றது, ஒருவன் இப்படி யோசிக்கிறான். ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது கலிமாவின் ஒரு பகுதி தான், இன்னொரு பகுதி "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது "முஹம்மதுர் ரஹுலுல்லாஹ்’ என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான, நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட ‘பித்அத்’ தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும் போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது . நாம், அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக - ஆமீன்.
நன்றி
kayalpatnamislam.blogspot.com
இன்பமும் துன்பமும்
உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.
எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.
ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.
அதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது? கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம்? பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம்? என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.
ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.
ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள்? “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.
கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்?
நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.
அதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது? இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.
மனிதா! இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே! ஏனென்றால்
ரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.
மனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா! நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே! எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய்! இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக! (2:155)
(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
நீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே! அச்சத்தால் சோதிக்கிறாயே! விவசாயத்தில் அழிவை ஏற்படுத்துகிறாயே! என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே! இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும்? ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ தானே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.
அதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா? 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன? என்றால் பொறுமை
இந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.
இன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா? உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா? அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா? அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன? பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன? என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
துன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா? நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா? என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா? நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா? என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா? நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா? என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா? நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா? நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே! நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி நியாயமாகும்?
எனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.
துன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே! இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.
இப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான்! உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.
நன்றி
readislam.net
எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.
ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.
அதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது? கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம்? பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம்? என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.
ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.
ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள்? “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.
கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்?
நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.
அதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது? இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.
மனிதா! இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே! ஏனென்றால்
ரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.
மனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா! நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே! எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய்! இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக! (2:155)
(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
நீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே! அச்சத்தால் சோதிக்கிறாயே! விவசாயத்தில் அழிவை ஏற்படுத்துகிறாயே! என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே! இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும்? ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ தானே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.
அதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா? 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன? என்றால் பொறுமை
இந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.
இன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா? உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா? அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா? அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன? பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன? என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
துன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா? நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா? என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா? நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா? என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா? நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா? என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா? நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா? நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே! நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி நியாயமாகும்?
எனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.
துன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே! இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.
இப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான்! உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.
நன்றி
readislam.net
Wednesday, August 4, 2010
வரலாறு - தோழர்கள்
தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ
ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ
அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல் பவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை!
எதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல். படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி!
ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி! அல்லது வீர மரணம்! மறுவுலகின் நிச்சய வெற்றி!
மரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.
ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
யத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா? அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை! அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.
ஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார்? முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் சந்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், "தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.
அகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது! நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் "தோழர்" ஆனார்.
தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
ஆண்டுகள் இரண்டு கழிந்தன.
நபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு?
சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனும் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.
நபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.
ஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்!
வரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின் படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.
குதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும் குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன?"
அகாபாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: "அல்ஜன்னாஹ் - சொர்க்கம்!"
அந்த வார்த்தை, "அல்ஜன்னாஹ்" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது! "நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் திருப்தியுற்றோம்!"
கண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.
அரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல!
அது போதும் எங்களுக்கு! என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள்! என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் திருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள். தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.
தாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா? அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று "இவன் இது செய்வான்" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.
அன்றிலிருந்து தாபித் இப்னு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.
இன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்(!) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்! போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்ன பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.
இவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்!
* * * * * *
இறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்
மதீனாவில் ஒருநாள்.
தாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், "என்னாயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரிக்க,
"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்" என்று பயத்துடன் பதில் வந்தது.
"ஏன்?"
"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்" என்றார் தாபித்.
தாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,
"தாபித் நானொரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா? நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்"
எத்தகைய தீர்க்கதரிசனம்? அதுவும் யாரிடமிருந்து? புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது!
"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக!"
"அதுதான் உமது வருங்காலம்"
யாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூகலம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.
தெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.
"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா?" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.
"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை" என்றார் உமர்.
மேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.
நபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்"
செவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம் உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.
இந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.
இது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதிகமாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், "எங்கே தாபித்? யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.
சென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ?
"என்ன செய்தி? தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரித்தார்.
"படுமோசமான செய்தி" என்று பதில் வந்தது.
"என்ன அது?"
களைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், "உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று? போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன்! என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்"
ஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும் எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன?
விரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).
"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால் சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று"
அந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக்கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.
பத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.
அது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.
* * * * *
மக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.
கிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.
பனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.
வரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.
விரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.
உயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கியும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.
பனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள் சென்று, "பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி? வந்து பேசச் சொல்லுங்கள்" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.
தங்களது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, "எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்".
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.
ஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். "எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.
பனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.
"தாபித்! எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்" என்றார்கள் முஹம்மது நபி.
ஆரம்பித்தார் தாபித்.
"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்திருப்பதில்லை"
"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்"
"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்"
சுருங்கக் கூறின், "எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.
அடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக் கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.
தாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.
போட்டி முடிந்தது!
பனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ்
என்பவர் எழுந்து, "நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன்! இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது!"
தோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
* * * * *
மீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.
எதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.
புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.
முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது தாபித்திற்கு. முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.
எழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை!
அனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.
"முஸ்லிம்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்! நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கேடு! உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு! அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்!
"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்"
பின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், "யா அல்லாஹ்! பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்"
அவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
மறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.
எதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.
அவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.
நாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.
நபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவில் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது! பின்னே? அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்!
ரலியல்லாஹு அன்ஹு!
தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ
ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ
அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல் பவுடர், சென்ட் அல்ல - இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல - இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் உடை; கஃபன் உடை!
எதிரே போர்களம் ரணகளமாகிக் கிடந்தது. வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், போர்வீரர்களின் பேரிரைச்சல். படுஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் அவர். ஒரே நோக்கம். வெற்றி!
ஒன்று எதிரிகளைக் கொன்றொழித்து போரில் வெற்றி! அல்லது வீர மரணம்! மறுவுலகின் நிச்சய வெற்றி!
மரணத்தை நோக்கி மரண அரிதாரம் பூசிக் கொண்டு ஓடிய அவர், தாபித் இப்னு கைஸ் அல் அன்ஸாரீ.
ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
யத்ரிபில் வாழ்ந்த இரு பெரும் கோத்திரங்களின் பெயர் நினைவிருக்கிறதா? அஞ்ச வேண்டாம், தேர்வு நடத்தப் போவதில்லை, நினைவுகளைக் கிளறிக் கொள்ளும் கேள்வி மட்டுமே. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள்தாம் அந்த இருபெரும் கோத்திரங்கள். அதில் கஸ்ரஜ் கோத்திரத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர், யத்ரிப் நகரில் உள்ள உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தாம் தாபித் இப்னு கைஸ். நுண்ணறிவாளர். பிரமாதமான உள்ளுணர்வு இருந்தது அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருந்தது. நாவன்மை! அவருக்கு அசாத்திய நாவன்மை. அதனுடன் கம்பீரக் குரல் வேறு. அவர் பேச ஆரம்பித்தால் கூட்டம் அப்படியே வசப்பட்டு விடும். அத்தகையதொரு திறமை அவருக்கு இயற்கையாய் வாய்க்கப் பெற்றிருந்தது.
ஆனால் அவரையே மக்காவிலிருந்து வந்த ஒருவர் வென்றார். வெறும் வாய்ப்பேச்சினால் அல்ல. அவர் கொண்டு வந்த செய்தி அப்படி. வேறு யார்? முஸ்அப் இப்னு உமைர்தாம். அவர் வந்து யத்ரிப் நகர மக்களுக்கு குர்ஆன் போதிக்க ஆரம்பித்தாரே அதில் தனது இதயத்தை உடனே பறிகொடுத்தவர்களில் தாபித்தும் ஒருவர். முஸ்அப் (ரலி) வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்ட மாத்திரத்திலேயே தாபித்தின் இதயம் அதற்கு அடிமையாகிவிட்டது. அந்த வசனங்களின் சந்தம், மனதையும் மூளையையும் ஒருங்கே பிசைந்தெடுக்கும் அதன் ஆழ்ந்த அர்த்தம், பொதிந்து கிடந்த அறிவுரைகள், திக்கற்ற மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், "தாகத்தில் தவிக்கும் நாவும் தொண்டையும் குளிர் நீரை ஹா... ஹா... வென்று அள்ளிப் பருகுவது போல்" பருக ஆரம்பித்தார் அவர். வறண்ட நிலம் நீரை ஏக்கத்துடன் ஈர்த்துக் கொள்வதைப்போல் அவரது இதயம் குர்ஆன் வசனங்களை உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தது.
அகலத் திறந்து கொண்ட அவரது மனதில் இஸ்லாம் ஆலமர வித்தாக வேரூன்றியது! நேற்றுவரை வெறும் தாபித் ஆக இருந்த அவர் "தோழர்" ஆனார்.
தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
ஆண்டுகள் இரண்டு கழிந்தன.
நபித்துவத்தின் 14ஆவது ஆண்டு. ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் (23.09.622). இஸ்லாமிய வரலாற்றின் புதியதொரு அத்தியாயத்தின் முதல் நாள் அது. யத்ரிபில் இருந்த முஸ்லிம்கள் காத்துக் கிடந்தனர், ஏதோ பிரிந்த குழந்தையைத் திரும்ப அடைவதைப்போல. நகரம் விழாக்கோலத்தில் இருந்தது. எதற்கு?
சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் பிரயாணம் ஒன்று துவங்கியிருந்தது. உலக வரலாற்றைப் புரட்டிப்போடும் பிரயாணம். ஹிஜ்ரத் எனும் அந்தப் பெரும்புலப்பெயர்வு, ஸஃபர் மாதம் 27இல் (12.09.622) தொடங்கியது. அன்றுதான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு மக்காவிலிருந்து யத்ரிப் நோக்கிக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் இருவரையும் எதிர்பார்த்துதான், யத்ரிப் மக்கள் ஊருக்கு வெளியே சென்று, பாலை மணல்மேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள்.
நபி, தம் தோழருடன் யத்ரிபில் அடியெடுத்து வைக்க, யத்ரிப் மதீனாவானது.
ஆரவாரம், வரவேற்புப் பாட்டு, கோலாகலம்!
வரவேற்பில் பங்கு கொண்டது குதிரை வீரர்களின் படை ஒன்று. அதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவர் இருந்தார். தாபித்.
குதிரை வீரர்களின் குழுவினர் நபியவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். முன்னால் வந்து நின்றார் தாபித். அந்தக் குழுவினருக்கு அவர்தான் பேச்சாளர், பிரதிநிதி. அல்லாஹ்வைப் புகழ்ந்தார், நபியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு கூறினார்:
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சத்தியப் பிரமாணம் அளிக்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தவரையும் குழந்தைகளையும் எப்படிக் காப்போமா அப்படி உங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கிறோம். இதற்காக எங்களுக்குக் கிடைக்கப்போகும் பிரதிபலன் என்ன?"
அகாபாவில் நிகழ்வுற்ற இரண்டாவது உடன்படிக்கையின்போது மதீனா நகரத்து மக்கள் நபியவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழி. இப்பொழுது மதீனாவில் அகாபாவில் பங்கு பெறாத இவர்கள் நபியவர்களிடம் நேரடியாகக் கூறினார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்று அகபாவில் அளித்த அதே பதிலைக் கூறினார்கள்: "அல்ஜன்னாஹ் - சொர்க்கம்!"
அந்த வார்த்தை, "அல்ஜன்னாஹ்" என்ற அந்த ஒற்றைச்சொல் - கண்கள் மலர்ந்தன, உள்ளங்கள் குளிர்ந்தன, முகத்தில் பேரொளி பிரகாசித்தது! "நாங்கள் திருப்தியுற்றோம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் திருப்தியுற்றோம்!"
கண்ணுக்குப் புலப்படாத ஒன்று, யாரும் பார்த்திராத ஒன்று, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்று, அதுதான், அதுமட்டும்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது.
அரசில் பங்கோ, அமைச்சர் பதவியோ இத்தியாதிகளோ அல்ல!
அது போதும் எங்களுக்கு! என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள், உயிர் துறக்க வேண்டுமா இந்தாருங்கள்! என்று வரிசை கட்டி நின்றார்கள்; செய்தார்கள். அல்லாஹ்வின் திருநபி சொன்னதெல்லாம் செய்தார்கள். அவர் அதிருப்தியுற்றதையெல்லாம் தூக்கி எறிந்தார்கள். தூய உள்ளங்களின் சோலையொன்று உருவானது அங்கு.
தாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் தனித்திறம் நாவன்மை என்று பார்த்தோமல்லவா? அந்தத் திறமையை, சாகசத்தை இஸ்லாத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் நபியவர்கள். இறைவனின் திருநபி என்ற வகையில் அவர்களிடம் அமைந்திருந்த அசாத்தியப் பல திறன்களில் ஒன்று "இவன் இது செய்வான்" என்று அறிந்த அதை, சரியான வகையில் முறையில் பயன்படுத்திக் கொள்வது.
அன்றிலிருந்து தாபித் இப்னு கைஸ் நபியவர்களின் பேச்சாளர் ஆகிப்போனார். மற்றொரு தோழர் இருந்தார், ஹஸ்ஸான் இப்னு தாபித். சிறப்பான கவிஞர். அவர் நபியவைக் கவிஞராகிப் போனார்.
இன்றும் நடைமுறையில் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்கள்(!) என்பதாகச் சிலரை வைத்துக் கொள்கின்றன. அவர்களுக்குக் கட்சியின் ஊதுகுழல், பிரச்சாரப் பீரங்கி என்று என்னென்னவோ அடைமொழிகள், பட்டங்கள்! போஸ்டரில் விளம்பரங்களில் மின்னுவதைப் பார்க்கலாம். ஆனால் என்ன பிரச்சனையென்றால், கட்சிகள் நியமித்துள்ள அத்தகையவர்களுக்கு மாற்றுக் கட்சியைத் தூற்றுவதே தொழிலாகவும் ஆபாசமும் நாராசரமுமாக மேடையில் பேசுவதே வாடிக்கையாகவும் ஆகிப்போக - கேட்கும் காதுகளில் இரத்தம் சொட்டாத குறை.
இவர் தோழர். வார்த்தைகள் இறையச்சத்தில் மூழ்கி எழுந்துவர வைரமாய்த்தான் மின்னினார், பார்ப்போம்!
* * * * * *
இறைபக்தியில் மிகைத்தவராய் உருவாகிக் கொண்டிருந்தார் தாபித். இறையச்சம் அவர் மனதில் மாபெரும் சக்தியுடன் புதைந்து கிடந்தது. அதனால் அல்லாஹ்வைக் கோபமூட்டும், அதிருப்தியூட்டும் எத்தகைய சிறு செயலாக இருந்தாலும் பெரும் விழிப்புடன் தவிர்த்துக் கொள்வதில் தவித்துக் கிடந்தார் அவர்
மதீனாவில் ஒருநாள்.
தாபித் இப்னு கைஸ் அளவற்ற வேதனையுடனும் துயருடனும் பயந்துபோயும் பயங்கரமானதொரு நிலையில் உள்ளதைக் கண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மிகவும் வியப்படைந்தவர்கள், "என்னாயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரிக்க,
"நான் என்னுடைய மறுமை வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டேனோ என அஞ்சுகிறேன்" என்று பயத்துடன் பதில் வந்தது.
"ஏன்?"
"நாம் ஆற்றிய காரியங்களுக்கு புகழப்படவேண்டும் என்று விரும்புவதை, எல்லாம் வல்ல அல்லாஹ் தடுத்திருக்கிறான். நான் புகழப்படவேண்டும் எனும் விருப்பம் உடையவனாய் என்னை உணர்கிறேன். மேலும் அவன் வீண் தற்பெருமையைத் தடை செய்துள்ளான். எனக்குப் பகட்டில் விருப்பம் இருப்பதைக் காண்கிறேன்" என்றார் தாபித்.
தாபித்திடம் தருக்கோ, அற்பத் தன்மைகளோ இல்லை என்பதை நபியவர்கள் எடுத்துக் கூறினார்கள். தாபித்திற்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறுதியில் நபியவர்கள் கேட்டார்கள்,
"தாபித் நானொரு உறுதி சொல்கிறேன். அது உமக்கு மகிழ்வளிக்குமா? நீர் நலமே வாழ்வீர், அனைவராலும் போற்றப்படுவீர், வீர மரணம் எய்துவீர், சுவர்க்கம் புகுவீர்"
எத்தகைய தீர்க்கதரிசனம்? அதுவும் யாரிடமிருந்து? புனிதரின் வாயிலிருந்து தெறித்து விழுந்த சொற்களில் தாபித்தின் முகமெங்கும் மகிழ்ச்சி பரவி ஒளி வீசியது!
"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக!"
"அதுதான் உமது வருங்காலம்"
யாருக்கும் மரணம் என்பது இனிய விஷயமல்ல. என்னதான் உலகில் பற்றற்று இருந்தாலும் அது மனிதனுக்கு வேதனையைக் கொண்டுவரும் நிகழ்வு. அதுவும் அந்த மரணத்தைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், உடல் ரணகளமாகும் என்பது உறுதி. ஆனால் அத்தகைய மரண நிகழ்வை தீர்க்கதரிசனமாக அறியவந்தால் குதூகலம் அடைகிறார்கள் அவர்கள். சந்தேகத்திற்கிடமின்றி உறுதியான செய்தியாக வரும்போது பேரானந்தம் அடைகிறார்கள். அத்தகைய மரணத்திற்காக வாழ்வை நேசித்துக் கிடந்தார்கள் அவர்கள்.
தெளிவடைந்தார் தாபித், ரலியல்லாஹு அன்ஹு!
* * * * *
பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குழுவொன்று நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்தது. அவர்களுடன் முஹம்மது நபி பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு நபியவர்களிடம் பனூ தமீமினர் வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அபூபக்ரும் உமரும் அங்கிருந்தார்கள். அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவரைச் சுட்டிக் காட்டினார் அபூபக்ரு. உமரோ, கஅகாஉ இப்னு மஃபத் என்பவரைக் கைகாட்டினார். அது இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக உருவாக ஆரம்பித்தது.
"நீங்கள் வேண்டுமென்றே எனது பரிந்துரையை மாற்ற நினைக்கிறீர்களா?" உமரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் அபூபக்ரு.
"உங்களை மறுத்துப் பேசும் உள்நோக்கமெல்லாம் எனக்கில்லை" என்றார் உமர்.
மேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.
நபியவர்கள் முன்னிலையிலேயே இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்"
செவியுற்றார்களே இருவரும், அவ்வளவுதான். அதன் பிறகு முஹம்மது நபியிடம் பேசும் போதெல்லாம் உமரின் குரல் மிக மிகத் தாழ்மையுடன் அமிழ்ந்து போய், அவர் சொல்வதை மறுமுறை சொல்லச் சொல்லி விளங்கிக்கொள்ள வேண்டியதாகிப் போனது நபியவர்களுக்கு.
இந்த இறைவசனத்தால், தான் தாக்கப்பட்டதாக நினைத்து மருகிய மூன்றாமவரும் உண்டு.
இது நிகழ்வுற்ற சில நாட்களுக்குப்பின் தாபித்திடம் திடீரென ஒரு மாறுதல் நிகழ்வுற்றது. யாரிடமும் கலக்காமல் தனித்திருக்க ஆரம்பித்தார். தனது உயிரைவிட அதிகமாய்ப் பாசம் வைத்திருந்த நபியவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார். வீட்டில் அடைந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. தொழுகைக்கு பாங்கு சொல்கிறார்களா, சென்று தொழுதுவிட்டு விரைந்து வந்து வீட்டில் அடைந்து கொண்டார். சில நாட்கள் கழிந்தன. தாபித் தென்படாததைக் கவனித்துவிட்ட நபியவர்கள், "எங்கே தாபித்? யாராவது சென்று விசாரித்து வாருங்களேன்" என்றதும் அன்ஸாரித் தோழர் ஒருவர் விரைந்தார்.
சென்று பார்த்தால், மிகவும் சோர்ந்து போய், குனிந்த தலையுடன் இருண்டு கிடந்தார் தாபித். வந்திருந்த அன்ஸாரித் தோழருக்குக் குழப்பம். ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ?
"என்ன செய்தி? தங்களுக்கு என்ன ஆயிற்று அபூ முஹம்மது?" என்று விசாரித்தார்.
"படுமோசமான செய்தி" என்று பதில் வந்தது.
"என்ன அது?"
களைப்பாய் அந்த அன்ஸாரித் தோழரை நிமிர்ந்து பார்த்தவர், "உங்களுக்கே தெரியும், எனக்கு இயல்பிலேயே உரத்த குரலென்று. நபியவர்களுடன் நானிருக்கும்போது அவர்களது உரையாடலை எனது குரல் அமிழ்த்தி விடுகிறது. இப்படியிருக்க, நீங்களும் கேட்டீர்களில்லையா அல்லாஹ் என்ன வசனத்தை இறக்கியிருக்கிறான் என்று? போச்சு, எல்லாம் போச்சு. எத்தனை தடவை அல்லாஹ்வின் தூதருடைய குரலைவிட என் குரல் உயர்த்திப் பேசியிருக்கிறேன்! என்னுடைய நற்காரியங்களெல்லாம் வீணாகிப்போய், அழிந்தேன். நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன் நான்"
ஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடிந்து நொறுங்கிப் போனார்கள் அந்த மேன்மக்கள். எச்சரிக்கை செய்யும் எத்தனை வசனங்களையும் எத்தனை முறை ஓதினாலும் பாறையில் வழிந்தோடும் எண்ணெயைப் போலல்லவா நமது மனங்கள் சலனமற்றுக் கிடக்கின்றன?
விரைந்து திரும்பினார் அந்த அன்ஸாரித் தோழர். முஹம்மது நபியைச் சந்தித்து, தாபித்தைத் தான் கண்ட கோலத்தையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அன்பும் அக்கறையுமாய்த் தம் தோழருக்கு மெய்ச்செய்தி ஒன்று பதிலாக அனுப்பினார்கள் முஹம்மது நபி (ஸல்).
"நீங்கள் மீண்டும் அவரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள், 'நீர் நரகவாசியல்ல. ஆனால் சொர்க்கவாசிகளுள் ஒருவர்' என்று"
அந்தச் செய்தி வந்தடைந்து தாபித்தை. அதற்குப் பின்தான் அவருக்கு உற்சாகமான இயல்பு நிலை திரும்பியது.
பத்ரு யுத்தத்தைத் தவிர, நபியவர்களுடன் அனைத்துப் போர்களிலும் தாபித் இடம் பெற்றிருந்தார். பிரமாதமான வீரர். அன்றைய போர்களில் யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் இரு தரப்பிலிருந்தும் சிலர் களத்தில் இறங்கி மற்போர் புரிவர். மற்போர் என்றால் விளையாட்டல்ல; வெற்றி, அல்லது மரணம். மிகவும் கடுமையான மற்போர்களிலெல்லாம் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் தாபித். அப்பொழுதெல்லாம் அவர் காத்திருந்த வீரமரணம் வாய்க்கவில்லை.
அது சிறப்பான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது.
* * * * *
மக்கா வெற்றியை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வரலாற்றில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அதன்பின் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா திரும்பியிருந்தார்கள். முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரம் அரேபிய தீபகற்பத்தில் பரந்து விரியத் தொடங்கி இருந்தது. மக்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருந்த ஸகாத் வரியையும் முஸ்லிமல்லாதவர்கள் அளிக்க வேண்டிய 'கரஜ்' எனும் காப்பு வரியையும் திரட்டுவதற்குத் தன் தோழர்களை நியமித்துப் பல திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்.
கிளம்பிச் சென்றார்கள் அவர்கள். அந்தந்த கோத்திரத்தினரும் அவர்களை வரவேற்று, தாங்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை மனமுவந்து அளித்துப் பெருமிதமாகத்தான் நடந்து கொண்டார்கள் - பனூ தமீம் கோத்திரத்தின் ஒரு பிரிவினரைத் தவிர.
பனூ தமீம் கோத்திரத்தினர் இருந்த பகுதிக்கு உயைனா இப்னு ஹிஸ்ன் அல்-ஃபஸாரீ ரலியல்லாஹு அன்ஹுதான் வரி திரட்ட அனுப்பப்பட்டிருந்த அதிகாரி. அவர் அங்கிருந்த அக்கம்பக்கத்துப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, பனூ தமீமின் கிளைக் கோத்திரமான பனூ அல்-அன்பாரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து குதித்தார்கள். அம்புகள், வாள்கள் என்று போருக்கான ஆயத்தத்துடன் முன்னேறி, உயைனாவை நெருக்கித்தள்ளி அப்பகுதியிலிருந்து விரட்டி விட்டனர்.
வரியாவது மண்ணாவது, அதெல்லாம் எதுவும் தரமுடியாது, என்ற போக்கிரித்தனம். அப்பட்டமான எதிர்ப்பு.
விரைந்து மதீனா திரும்பிய உயைனா, முஹம்மது நபியிடம் செய்தியைத் தெரிவிக்க, நபியவர்கள் மிக உடனே ஐம்பது வீரர்கள் கொண்ட படையை உயைனா தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.
உயைனா தலைமையில் கிளம்பி வந்த படை, பகலில் பதுங்கியும் இரவில் முன்னேறியும் பனூ அல்-அன்பார் கோத்திரத்தினர்மீது திடீர்த்தாக்குதல் நடத்தியது. சுதாரிக்க விடவில்லை அவர்களை. கிடுகிடுவென்று தாக்குதல் நிகழ்த்தி, ஆண்கள், பெண்கள், பாலகர்கள் என்று 62 பேரைக் கைப்பற்றினர். அவர்களது செல்வமும் கைப்பற்றப்பட்டது. மதீனா கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகள் ரம்லா பின்த் அல்-ஹாரிதின் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர்.
பனூ தமீம் கோத்திரத்தினருள் ஒரு பகுதியினர் நீண்ட நாட்களுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். நபியவர்களுடன் இணைந்து மக்கா, ஹுனைன் போர்களிலும் கலந்து கொண்டவர்கள் அவர்கள். ஆனால் மற்றொரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த பனூ தமீம் முஸ்லிம்களுக்கு, பனூ அல்-அன்பாரைச் சேர்ந்த தங்களுடைய உறவினர்கள் செய்த துர்ச்செயலும் அதன் பின்விளைவும் தெரியவந்தன. உடனே தங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அடங்கிய குழுவொன்றை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்தக் குழு மதீனா வந்து, மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள் சென்று, "பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறோம். கைப்பற்றப்பட்ட எங்கள் மக்கள் சம்பந்தமாய்ப் பேசவேண்டும். எங்கே முஹம்மது நபி? வந்து பேசச் சொல்லுங்கள்" என்று பகட்டாரவாரம் செய்ய, நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. வெளியே வந்த அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, லுஹர் நேரம் நேரம் வந்தது. நபியவர்கள் கிளம்பி மக்களுக்குத் தொழவைத்து முடித்தார்கள். ஸுஃப்பாவில் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகே அந்தக் குழுவினர் அவர்களிடம் விரிவாய்ப் பேச முடிந்தது.
தங்களது கோத்திரத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் படைகளுடன் இணைந்து நட்புறவுடன் போரிட்டதையும், அரபிகள் மத்தியில் தங்களது கோத்திரத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமதிப்பையும் எடுத்துக் கூறி, "எங்களது பேச்சாளரும் கவிஞரும் அவர்களது பேச்சுத் திறன், கவி வல்லமை கொண்டு உங்களது பேச்சாளர் மற்றும் கவிஞருடன் போட்டியிட வந்துள்ளனர். அனுமதி தாருங்கள்".
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, அதில் தங்களது சுயபெருமை, கீர்த்தி உரைத்தல் இதெல்லாம் அரபியரின் கலாச்சாரத்தில் ஒரு மேட்டிமையாகக் கருதப்பட்ட கால கட்டம்.
ஒரு புன்னகையுடன் அதற்கு நபியவர்கள் அனுமதி அளிக்க, வந்திருந்த குழுவினர் சார்பாய் அவர்களது தலைசிறந்த பேச்சாளர் உத்தரித் இப்னு ஹாஜிப் எழுந்து நின்றார். "எங்கள் அந்தஸ்தென்ன, பெருமையென்ன, கீர்த்தியென்ன" என்று அவர்களது குலத்தின் அருமை பெருமை பேசும் ஒரே பளபளா பேச்சு. பனூ தமீம் குலத்து மேன்மை, சாதனைகள் எல்லாம் சிறப்பான சொல்லாடலில் பட்டியலிடப்பட்டன. புரியும்படி சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உறுப்பினரோ, அமைச்சரோ, சட்டசபையில் தன் தலைவரைப் பற்றியும் அரசைப் பற்றியும் அடுக்கடுக்காய் எடுத்துவிடுவாரே அதைப்போல.
பனூ தமீம் குழு புளகாங்கிதத்துடன் பார்க்க, பெருமையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் உத்தரித்.
"தாபித்! எழுந்து நின்று அவர்களுக்கு பதிலளியுங்கள்" என்றார்கள் முஹம்மது நபி.
ஆரம்பித்தார் தாபித்.
"புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அனைத்து வானங்களும் பூமியும் அவன் படைத்தவை ஆகும். அவை அனைத்திலும் அவன் நாடியதே நடக்கும். அவனுடைய அரியாசனம் அவனது அறிவின் விரிவாக்கம். அவனுடைய கருணையின்றி எதுவுமே நிலைத்திருப்பதில்லை"
"அவன் தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு எங்களைத் தலைவர்களாக ஆக்கினான். அவனுடைய படைப்பில் மிகச் சிறந்தவரை தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர் பெருமதிப்பிற்குரிய பரம்பரையைச் சேர்ந்தவர். மிகவும் நம்பகமானவர். வார்த்தைகளில் உண்மையானவர். செயல்களில் சிறப்பானவர். அவன் அவருக்கு ஒரு வேதத்தை அருளினான், தன்னுடைய படைப்பினங்களுக்கு அவரைத் தலைவராக்கினான். அனைத்துப் படைப்பினங்களுள்ளும் அவர் அவனுடைய நல்லாசிக்கு உள்ளானவர்"
"அந்தப் படைத்தவன்மேல் நம்பிக்கைக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். அவருடைய மக்களிலிருந்து மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து இங்குக் குடியேறி வந்தார்களே, அவர்களும் பெருமதிப்புடைய அவருடைய உறவினர்களில் சிலரும் நற்காரியங்கள் புரிவதில் சிறப்பானவர்களும் அவர்மேல் நம்பிக்கைக் கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் அன்ஸார்கள் (உதவியாளர்கள்) அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்தோம். ஆகவே நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். அவனுடைய தூதரின் அமைச்சர்கள்"
சுருங்கக் கூறின், "எல்லாம் இருக்கட்டும். எதுவுமே சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்முன் ஒன்றுமேயில்லை" என்று அப்படியே எதிரணியின் வாயை அடைத்துவிடும் பேச்சு. அவ்வளவுதான்.
அடுத்து அல் ஸப்ரகான் இப்னு பத்ரு எனும் தமீம்குலக் கவிஞன் எழுந்து கவிதை பாடினான்.
தாபித் இப்னு கைஸை எப்படிச் சிறப்புப் பேச்சாளராகத் தேர்ந்து வைத்திருந்தார்களோ அதேபோல் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) எனும் தோழரைக் கவிஞராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் முஹம்மது நபி. அல் ஸப்ரகான் அமர்ந்ததும் ஹஸ்ஸான் எழுந்து, தன் கவித் திறவுகோலைக் கொண்டு மெதுவாகத் திறக்கத் தொடங்கி, சபையினரின் உள்ளங்களை இறுதியில் கட்டிப் போட்டார்.
போட்டி முடிந்தது!
பனூ தமீம் குழுவினருள் அமர்ந்திருந்த அல் அக்ரஃ பின் ஹாபிஸ்
என்பவர் எழுந்து, "நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன்! இந்த முஹம்மது வெற்றியுறப் போகிறார். அவருடைய பேச்சாளர் நாவன்மை மிகைத்தவராய் உள்ளார். அவருடைய கவிஞர், நம் கவியை விஞ்சியிருக்கிறார். சந்தேகமேயில்லாமல் முஸ்லிம்களின் குரல் நம்மைவிட ஓங்கியிருக்கிறது!"
தோற்றுப்போன அணிக்குப் பரிசு வழங்கப் பட்டது. பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் வந்திருந்த தமீம் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
* * * * *
மீண்டும் முஸைலமா. அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) வரலாற்றில் நாம் சந்தித்த யமாமா போர்க் களம். தாபித் பின் கைஸும் அன்ஸார்கள் படைப்பிரிவின் ஒரு தலைவர். அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் எனும் தோழர் முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. அந்தப் போர் எத்தகைய கடினமான சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருந்தது, எத்தகைய வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அப்பாதின் வரலாற்றில் பார்த்தோம்.
எதிரிகளின் கை சற்று ஓங்கியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைந்து எதிரிப்படைகள் தாக்கி முன்னேறிக் கொண்டே தலைமைத் தளபதி காலித் பின் வலீதின் முகாம்வரை வந்து, அவரது கூடாரத்தைக் கிழித்து, அவருடைய மனைவி உம்மு தமீமைக் கொன்று விடும் நிலைகூட ஏற்பட்டுவிட்டது.
புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்திருந்த பாலைநில பதுவூ அரபிகளும் தோழர்களுடன் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பதுவூ அரபியரின் ஒற்றுமையற்ற பக்குவமற்ற போக்கு, முஸைலமாவின் படைவீரர்களின் கைஓங்க உதவி புரிந்துவிட்டது. இவ்விதம் நிகழ்வுற்றப் போரில் பல தலைசிறந்த தோழர்கள் வீரமரணம் தழுவினர்.
முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது தாபித்திற்கு. முஸ்லிம் படைப் பிரிவுகள் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஒருவர் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதும் கண்டு, அவரால் பொறுக்க இயலவில்லை.
எழுந்து நின்று அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் இறந்த உடலின் மீது பூசும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டவர் பிறகு தனது உடலை போர்த்திக் கொண்டார். இறந்த உடலை அடக்கம் செய்யப் போர்த்தும் கஃபன் உடை!
அனைவரையும் நோக்கி கணீரென்ற தனது உரத்தக் குரலில் முழங்க ஆரம்பித்தார்.
"முஸ்லிம்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்! நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் இல்லை. வெட்கக்கேடு! உங்களது ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாத போர்முறை உங்களது எதிரிக்குத் துணிச்சலையும் உற்சாகத்தையும்தான் அளித்திருக்கிறது. வெட்கக்கேடு! அவர்களுடைய தாக்குதலுக்கு அடிபணிந்து கிடக்கிறீர்கள்!
"எதிரிகளிடமிருந்து தீயபழக்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்; அது மோசமானது. உங்கள் தோழர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்"
பின்னர் வானத்தை நோக்கி இறைஞ்சினார், "யா அல்லாஹ்! பொய்யனை நபியென்று நம்பிக்கிடக்கும் இந்த எதிரிகளுக்கும் எனக்கும் சம்பந்தமற்றவனாக உன் எதிரில் நிற்கின்றேன். இந்த முஸ்லிம்களின் தவறுகளை விட்டு விலகி விட்டவனாக உன்னிடம் வருகிறேன்"
அவ்வளவு தான். மரணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
மறுபுறமோ அப்பாத் பின் பிஷ்ருவின் உணர்ச்சிகரமான அழைப்பைக் கேட்டு அன்ஸாரிகள் குழுமிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இணைந்தார் தாபித்.
எதிரே ரணகளமாகிக் கிடந்த போர்களம். வாள்கள் உரசும் ஒலி, அது கிளப்பும் தீப்பொறி; பாயும் ஈட்டிகள், அம்புகள், இறந்து விழும் படைவீரர்கள்; துண்டாடப்பட்ட அங்கங்கள், உருண்டு விழும் தலைகள்; களமெங்கும் பரவிக் கிடந்த இரத்தம், வீரர்களின் போர் முழக்கம். படு ஆக்ரோஷமுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது யுத்தம்.
அந்தக் கூட்டத்திற்குள் எதிரிப் படைகளை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து மூழ்கினார் தாபித்.
அவருடன் அப்பொழுது இணைந்திருந்த மற்ற தோழர்கள், அல் பர்ரா இப்னு மாலிக், உமர் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப், அபூ ஹுதைஃபாவினால் விடுவிக்கப்பெற்ற சலீம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர். அவர்களுடன் சிங்கம்போல் களத்தில் புகுந்து சரமாரியாக எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார் தாபித். அவருடைய மூர்க்கமான தாக்குதலும் அதில் எதிரிகள் சாய்ந்து விழும் வேகமும் கண்ட முஸ்லிம் படைகளுக்குத் தீப்பற்றியது. துணிச்சலையும் வீரத்தையும் அவர்களுக்கு அது அள்ளிக் கொட்டியது. படு மூர்க்கமுடன் எதிரிகள்மீது பாய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அப்பொழுதுதான் எதிரிப் படைகளுக்கு அச்சம் சூழ ஆரம்பித்தது. போர் திசை திரும்பியது. ஆக்ரோஷமாய் எதிரிகளை “மரணத் தோட்டத்திற்குள்” விரட்டிச் சென்றது முஸ்லிம்கள் படை.
நாலாபுறமும் சுழன்று சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார் தாபித். ஆயுதங்கள் சுழன்று கொண்டிருந்தன. எதிரிகளைத் தாக்கி முஸ்லிம் படைகள் முழுவெறியுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. கொளுத்தும் வெயிலில் களத்தில் நெருப்பு பறந்து கொண்டிருந்தது. தாபித்தின் உடலெங்கும் சகட்டுமேனிக்கு விழுப்புண்கள். பெருக்கெடுத்தோடும் குருதி, வழிந்தோடும் வியர்வையுடன் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு வீரமரணம் எய்தினார் தாபித் இப்னு கைஸ்.
நபியவர்களின் தீர்க்கதரிசனம் அன்று யமாமாவில் முழுதாய் நிறைவேறியது. மரணம் பெருமிதம் கொண்டது! பின்னே? அதை அரவணைக்க, உடையுடுத்தி ஒப்பனையிட்டு ஓடியவராயிற்றே அவர்!
ரலியல்லாஹு அன்ஹு!
Subscribe to:
Posts (Atom)